'ஜனநாயகத்தின் நான்காவது தூண் தகர்க்கப்பட்டது' - பத்திரிகையாளர் இழிவுபடுத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: காவல் நிலையத்தில் பத்திரிகையாளர் அரைநிர்வாணமாக நிற்க வைத்து உள்ளாடையை கழற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்தியப்பிரதேச மாநில அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் ஏப்ரல் 2ம் தேதி நடந்துள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அரை நிர்வாண பத்திரிக்கையாளர்களின் புகைப்படங்கள் வியாழக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து அந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o9C8GjL
via
கருத்துகள்
கருத்துரையிடுக