முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த திட்டம் - பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். அப்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீபாவளிக்கு முன்பாக இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்தச் சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். முதல் நாளில் அவர் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்தார். 2-வது நாளான நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, பொருளாதாரம், அணுசக்தி, பருவநிலை மாறுபாடு, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wymrLNb
via

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது அவசியம்

... from Dinamalar.com |ஏப்ரல் 23,2022 https://ift.tt/WLrzlmD